P-5 நாடுகள் 3-ஆம் மாநாடு
அமெரிக்கா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ரஷியா மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளும் அணு சக்தி கொண்ட வல்லரசு நாடுகளாகத் திகழ்கின்றன. P-5 எனப்படும் இந்த நாடுகளின் முதல் மாநாடு கடந்த 2009-ல் லண்டனிலும், இரண்டாவது மாநாடு 2011-ல் பாரீஸிலும் நடைபெற்றன. மூன்றாவது மாநாடு வாஷிங்டனில் கடந்த ஜூன் (2012) 27-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடந்தது. மாநாட்டின் முடிவில் P-5 நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ' அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் பல்வேறு கடுமையான சவால்கள் இருப்பது கவலை தருகிறது. அணு ஆயுதங்களை ஒழிப்பது என்ற கூட்டு இலக்கை சாதிப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டும். சீனா தலைமையில் ஒரு செயல்பாட்டுக் குழுவை அமைப்பதற்கான செயல்திட்டத்திற்கு P-5 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த நாடுகள் அணுசக்தி தொடர்பான தங்களின் இரு தரப்பு மற்றும் பலதரப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டன' எனக் கூறப்பட்டிருந்தது.