அசாம் வெள்ளம்- ரூ.500 கோடி ஒதுக்கீடு
அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டதால் அம்மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்துக்கு ரூ.500 கோடி நிவாரண நிதியாக அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு வெளியிட்டார்.