இஸ்ரோ 3-வது ஏவுதளம்
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 60 ராக்கெட்டுகளை ஏவுவதற்கு வசதியாக 3-வது ஏவுதளத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 'அடுத்த 24 மாதங்களில் 24 ராக்கெட்டுகளை ஏவுவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதில் தொழில் நுட்ப செயற்கைக் கோள் மற்றும் மற்ற நாட்டு செயற்கைக் கோள்களும் அடங்கும். அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ஜிஎஸ்எல்வி-3 செயற்கைக் கோளை புதிதாக அமைக்க உள்ள ஏவுதளத்திலிருந்தே ஏவத் திட்டமிட்டுள்ளோம். தொழில்நுட்ப செயற்கைக் கோளைத் தொடர்ந்து சந்திராயன்-2 செயற்கைக் கோள், சூரியன் மற்றும் சனி கிரகத்தை ஆய்வு செயவதற்கு செயற்கைக் கோள்களை அனுப்புவதற்கும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது' என்றும் தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.