குஜராத்தில் மாருதி ஆலை
மாருதி சுசுகி நிறுவனம் குஜராத் மாநிலத்தில் புதிய கார் தயாரிப்பு ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ரூ. 4,000 கோடி முதலீட்டில் இந்த ஆலை அமைய உள்ளது.குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் அமையவுள்ள புதிய ஆலையின் உற்பத்தித் திறன் படிப்படியாக அதிகரிக்கப்படும். முதல் கட்டமாக இந்த ஆலையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.