Sunday, June 3, 2012

விரைவில் குரூப் 2 தேர்வு முடிவு

நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அதிகாரி, உதவி வணிக வரி அதிகாரி, சப்-ரிஜிஸ்திரார், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர், வருவாய் ஆய்வாளர் போன்ற 7 ஆயிரம் சார்நிலை பதவிகளுக்கான குருப்-2 தேர்வினை டி.என்.பி.எஸ்.சி.கடந்த ஆண்டு ஜுலை மாதம் 30-ம் தேதி நடத்தியது. இதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இது பற்றி டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் கூறுகையில், 'குரூப்-2 தேர்வு முடிவு தயார்நிலையில் உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தேர்வு முடிவு வெளியிடப்படும்' என்று தெரிவித்தார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP