பிரதமர் மியான்மர் பயணம்
பிரதமர் மன்மோகன்சிங் அரசு முறைப் பயணமாக மியான்மர் சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை எஸ்.எம்.கிருஷ்ணாவும் சென்றிருந்தார். மியான்மர் அதிபர் தெய்ன் செய்னை மன்மோகன் சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளும் தங்களின் எல்லைப் பகுதியில் பயங்கரவாத செயல்பாடுகளை முறியடிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.கடந்த 25 ஆண்டுகளில் மியான்மருக்கு சென்றுள்ள முதல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் என தகவல்கள் தெரிவிக்கின்றன.