ஐ.ஏ.எஸ்: தமிழகம் சாதனை
ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ். திவ்யதர்ஷினி முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த சட்ட பட்டதாரியான இவர், ஊழலுக்கு எதிராக போராடுவதே தனது குறிக்கோள் என்கிறார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வி. வருண்குமார் 3வது இடமும், எம். அரவிந்த் 8-வது இடமும், ஆர். ராகப்பிரியா 28வது இடத்தையும் பிடித்துள்ளனர். பீர் முகமது 59-வது இடமும், எஸ். கார்த்திகேயன் 118வது இடத்தையும், பி.சீனிவாசன் 134-வது இடத்தையும் பெற்றுள்ளனர். 3-வது இடம் பிடித்த ஆர்.வி. வருண்குமார், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ் கல்வியகத்தில் பயின்றவர். மனிதநேயம் கல்வியகத்தின் நிறுவனர் சைதை துரைசாமியை வருண்குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.