S.I தேர்வு - இலவச பயிற்சி
சென்னையில் இயங்கிவரும் சைதை துரைசாமியின் ‘மனிதநேய அறக்கட்டளை’ பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி நடத்திய 1095 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு இங்கு 640 பேர் பயிற்சி பெற்றனர். இவர்களில் 185பேர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
அடுத்ததாக இவர்களுக்கு உடல்திறன் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. உடல் திறன் தேர்வுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இயக்குநர் ஆனந்த நடராஜன் தலைமையிலான குழுவினர் பயிற்சி அளிக்கிறார்கள்.
மனித நேய அறக்கட்டளை மையத்தில் படிக்காமல் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இந்த இலவச பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
விருப்பம் உள்ளவர்கள், ‘சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ் கல்வியகம், 28- முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை- 35’ (தொலைபேசி எண்: 044-24358373, செல்போன்: 98401-06162) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மனிதநேய கல்வி அறக்கட்டளையின் மாநிலத் தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
அடுத்ததாக இவர்களுக்கு உடல்திறன் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. உடல் திறன் தேர்வுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இயக்குநர் ஆனந்த நடராஜன் தலைமையிலான குழுவினர் பயிற்சி அளிக்கிறார்கள்.
மனித நேய அறக்கட்டளை மையத்தில் படிக்காமல் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இந்த இலவச பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
விருப்பம் உள்ளவர்கள், ‘சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ் கல்வியகம், 28- முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை- 35’ (தொலைபேசி எண்: 044-24358373, செல்போன்: 98401-06162) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மனிதநேய கல்வி அறக்கட்டளையின் மாநிலத் தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.