Wednesday, August 4, 2010

வெற்றி உறுதி

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2,653  கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் உங்களுக்கும் ஓர் இடம் நிச்சயம். சரியான திட்டமிடலும் விடாமுயற்சியும் இருந்தால் இது கண்டிப்பாக சாத்தியம். விண்ணப்பத்தைப் போட்டுவிட்டோம். ஏதோ சில புத்தகங்களை வாங்கிப் படித்தோம், தேர்வெழுதினோம் என்றில்லாமல் டி.என்.பி.எஸ்.சி.யின் பாடத்திட்டத்தை தெளிவாகப் பாருங்கள். அவற்றின் அடிப்படையில் திட்டமிடுங்கள்.



பாடத்திட்டங்கள் பத்தாம் வகுப்பு தரத்திலானவை என்பதால் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை முழுமையாக படித்து முடியுங்கள். ஆண்டுகள், முக்கிய சம்பவங்கள் நினைவில் நிற்பதற்கு வசதியாக அவற்றை தனியாக குறிப்பெடுத்து வைத்து படித்து வாருங்கள். தனியார் வெளியிடும் தரமான புத்தகங்களையும் வாசியுங்கள். நாட்டு நடப்புகளை நல்ல நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக நன்கு கவனித்து வாருங்கள். முக்கியமானவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
கடந்த ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பயிற்சி செய்து கொள்ளுங்கள். மாதிரிக் கேள்வித் தாள்களைப் படியுங்கள்...பயிற்சி செய்யுங்கள். நீங்கள் திருப்தியாகும் வரை மீண்டும் மீண்டும் படியுங்கள், பயிற்சி செய்யுங்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள். வெற்றிக்கனி உங்கள் கையில் விழ காத்திருக்கிறது.
ங்களுக்கு உதவ ‘வேலை இருக்கு’ இணையதளமும் களமிறங்கியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வு தொடர்பான தகவல்கள், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் உள்பட பயனுள்ள குறிப்புகளை ‘வி.ஏ.ஓ. ஸ்பெஷல்’ என்ற தனித் தலைப்பில் தொடர்ந்து வெளியிட உள்ளது. படித்து பயன்பெறுங்கள். இந்தத் தகவல்களை இலவசமாக உங்கள் இ-மெயிலில் பெற நமது இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் இடதுபுறம் மேல்பகுதியில் உள்ள இ-மெயில் சப்ஸ்கிரிப்ஷன் பெட்டியில் உங்கள் இ-மெயில் ஐ.டி.யை பதிவு செய்து சந்தாதாரர் ஆகிக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP