சேது திட்டம் சாத்தியமில்லை
சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் அமைப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட பச்சௌரி குழு, சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் அமைக்க சாத்தியம் இல்லை என்று அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் அமைத்தால், பொருளாதாரச் செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று பச்சௌரி குழு தெரிவித்துள்ளது. பச்சௌரி குழு அளித்த அறிக்கை மீது பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கோரியது. இதையடுத்து சேது சமுத்திய திட்ட வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.