Thursday, June 10, 2010

போலீஸ் தேர்வு பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 2-ம் நிலைக் காவலர்,​​ சிறைக் காவலர்கள்,​​ தீயணைப்பாளர்கள் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி நடத்தப்பட உள்ளது.​
இம் மாதம் 12-ம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறை எதிரேயுள்ள காதுகேளாதோர் பள்ளியில் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.​ பங்கேற்க விரும்புவோர் அன்று காலை 10 மணிக்கு பள்ளியில் ஆஜராக வேண்டும். பின்னர் சனி,​​ ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும்.​ இதில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மனுதாரர்களும் பங்கேற்கலாம் என்கிறார், திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜயசேகரன் நாயர்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP