புதிய தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத்
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக தற்போது பணியாற்றி வரும் எஸ்.ஒய்.குரேஷியின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் சம்பத் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சம்பத் தேர்தல் ஆணையர்களில் ஒருவராகப் பணியாற்றி வந்தார்.